சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரிதர அனல் கையில் ஏந்தி, பண் - காந்தாரபஞ்சமம் (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ZBhQwkvFN8o |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.019  
எரிதர அனல் கையில் ஏந்தி,
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) ; (திருத்தலம் அருள்தரு பூங்குழனாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில், நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர் அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே. | [1] |
மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருள கையது ஓர் கனல்-எரி கனல ஆடுவர் ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர் செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே. | [2] |
மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர் பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர் அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே. | [3] |
இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர் பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர் அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர் மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே. | [4] |
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர் வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர் அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே. | [5] |
கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர் சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர் அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில் நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே. | [6] |
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே, பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர் அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ் புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே. | [7] |
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர், அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே. | [8] |
வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில் பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும், அறிகில அரியவர் அம்பர், செம்பியர் செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே. | [9] |
வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டிய மொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ! அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே. | [10] |
அழகரை, அடிகளை, அம்பர் மேவிய நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை, உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்- தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே! | [11] |